சேரவஞ்சி கவிதைகள் 20
•
சற்று திறந்த
அலமாரியினுள்
மறைந்துகொள்வதாய் நெளிந்துகொண்டிருக்கிற
அப்பாவின்
சிறுபிள்ளை போல்
அமர்ந்துகொள்கிறது
ஏரிக்குள்
ஏறி
எட்டிப்பார்க்கிற
தனிமையின் ஒரு
மரக்கிளையில்
இளவேனில்
காலத்தில் கூடிழந்த
குக்கூ ஒன்று
•
ஒன்று உண்டாயெனக் கூட அறிந்திருக்கவில்லை
அது இன்னும்
கூடிழக்கும் காலமென்று
ஒன்றை
இளவேனில் காலத்துக் கூடிழப்போ
அமானுஷ்யத்தினும்
அமானுஷ்யம்
இதற்கு
•
என்றாலும்
மோசமில்லை
ஒன்றும்
•
மர நிழலைத் தருகிறது
கரையோரக் குளிர்
பச்சையத்தை
பாசி தருகிறது
இலையுரசும் சங்கீதத்தை
இசைக்கிறது
அலை புரளும் நீர்
சக குக்கூக்கள் வரவுண்டு
வைகரையின் இக் கிளையிலும்
உண்டு ஒன்று
மற்றொன்றாய்
என
ஒவ்வொன்றும் உண்டு இங்கு
கூட்டைப் போலவே
ஏரியிலும்
•
நேற்றொரு பறவை வந்திறங்கியது
கிளையின் மறு பிரிவில்
எங்கிருக்கிறது உன் கூடு
என்றது இதை அது
கீச்சிக்கொண்டிருந்தன்
மத்தியில்
நீரசைவில்லை
குளத்தில் ஒரு கணம்
தீப்பிடித்தெரிந்தது அதன்
உள்ளுக்குள்ளுக்குள்.
•
சேரவஞ்சி
#அந்நியப்_பறவை
Comments
Post a Comment