~
யாரிடமாவது பேசவேண்டும்
அலகால்
தன் சிறகை உரசிக் கொள்கிறது
பறவை
அரைவட்டத்திற்குத்
தும்பிக்கையை
உயர்த்திக்காட்டுகிறது
பிடி யானை
மண்ணைப்
பறித்துக்கொண்டிருக்கிறது
தெருநாய்
காலைச் சொரிந்துகொண்டிருக்கிறது
பூனை தன் மற்றொரு காலால்
இருட்டுக் குளக்கரையில்
மீனுக்குப் பொரி போடுகிறார்
ஓர் ஊமை
~
சேரவஞ்சி
Comments
Post a Comment